“ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான அழுத்தத்தினை ஐ.நா. பிரயோகிக்க வேண்டும்”

June 25, 2008

இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கு தேவையான அழுத்தத்தினை சிறிலங்கா அரசாங்கம் மீது ஐக்கிய நாடுகள் சபை பிரயோகிக்க வேண்டும் என்று உலக ஊடகவியலாளர்கள் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை விடுத்திருக்கின்றன.

29 உலக ஊடக அமைப்புக்கள் இணைந்து விடுத்துள்ள இக்கோரிகை தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பன் கீ மூனுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

Read the rest of this entry »

ஊடகவியலாளன் தேவகுமார் படுகொலை

June 25, 2008

சக்தி செய்தியாளர் பரநிருபசிங்கம் தேவகுமார் (வயது-34) என்பவர் கூரிய ஆயதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஐந்து வருடங்களுக்குமதிகமாக சக்தியின் யாழப்பாணச் செய்தியாளராக கடமையாற்றிய இவர் கோயில் திருவிழாக்கள் உட்பட குடாநாட்டின் விளையாட்டு நிகழவுகள் மற்றும் பொது நிகழ்வுகளில் அக்கறையுடன் செயற்பட்டுவந்த போதிலும் அரசியல் ரீதியான அறிக்கையிடல்களை குடாநாட்டு சூழ்நிலை காரணமாக தவிர்த்து வந்தார் என்றும் தெரிவிக்கப்டுகின்றது. Read the rest of this entry »


தகவல் அறியும் உரிமைக்கு அரசாங்கமும் புலிகளும் மதிப்பளிக்க வேண்டும்.

April 26, 2008
வட போர்முனையான முகமாலைக் களமுனையில் பல நூற்றுக்கணக்கில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறிலங்காப் படையினரைச் சந்திக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுதந்திர ஊடக இயக்கம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் படையினரை புகைப்படம் எடுக்கச் சென்ற போது தாங்கள் அரசாங்க அதிகாரிகளால் தடுக்கப்பட்டதாக 4 புகைப்பட ஊடகவியலாளர்கள் எம்மிடம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தனர்.

மருத்துவமனைகளுக்குள் ஊடகவியலாளர்கள் சென்று புகைப்படம் எடுத்து களமுனை பாதிப்புக்களை வெளியிடுவதில் எதுவித பிரச்சினையும் இல்லை.

Read the rest of this entry »