1994 ஆம் ஆண்டு ருவண்டாவில் இனப்படுகொலை காலத்தில் அங்கு அதிகமான செய்தியாளர்கள் கொலை செய்யப்பட்டதற்குப் பிறகு, ஒரு ஆண்டில் மிகவும் அதிகமாக, கடந்த 2007 ஆம் ஆண்டில்தான் 86 செய்தியாளர்கள் கொல்லப்பட்ட்டுள்ளனர்.
கடந்த வருடத்தில் மேலும் ஒரு டஜன் பேர் கடத்தப்பட்டு அல்லது விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டதாக, பாரிசை தளமாகக் கொண்டு செயற்படும், எல்லைகளில்லா பத்திரிகையாளர் அமைப்பு கூறியுள்ளது.
கொல்லப்பட்ட செய்தியாளர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்களாவர்.
தொடர்புசாதனங்களுக்கான மிகவும் ஆபத்தான நாடாக இராக் திகழ்ந்துள்ளது.
அங்கு 47 செய்தியாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவரைத் தவிர ஏனைய அனைவரும் இராக்கிய நாட்டவர்களாவர்.
June 26, 2008 at 12:25 pm
eannada seikiraai