1956ம் யூலை 5ம் நாள் நடைமுறைக்கு வந்த சிங்கள மொழிச் சட்டத்தைதத் தொடர்ந்து தந்தை செல்வா தலைமையில் நடத்தப்பட் காந்தியப் போராட்டம் நசுக்கப்பட்டதை அடுத்தும் கொழும்பில் இனக்கலவரம் பரவியது. வீதியிலும் பேருந்துகளிலும் கண்ட வீதிகளிலும் கடைகளிலும் கொள்ளைகள் நடைபெற்றன. இக்கலவரங்கள் கிழக்கு மாகாணத்தில் கல்லோயா அம்பாறைப் பகுதிகளிலும் பரவியது.
தமிழர் பகுதிகளிலே குடியேற்றப்பட்ட சிங்களவர் இப்பகுதித் தமிழ்மக்களைத் தாக்கினர். பெண்கள், குழந்தைகள் உட்பட 150 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
இக்கலவரம் தமிழ் மக்களை அச்சுறுத்தி சிங்களம் மட்டும் சட்டத்தை ஏற்றுக் கொள்ள வைப்பதற்காக பண்டாரநாயக்காவின் சிங்கள அரசால் மேற் கொள்ளப்பட்டது. இதனை சிங்களப் பிக்குகளும், ஏனைய சிங்களத் தீவிரவாதிகளும் நடத்தி முடித்தனர்.