யூலை 60 தேர்தல் தமிழருக்கு எதிரான இனவாதப் பிரச்சாரத்தின் உச்சத்தைக் குறிக்கிறது. இத் தேர்தலில் முக்கிய தலைவியாகச் சிறிமாவோ உருவெடுத்தார். தனது கணவர் பண்டா காட்டிய வழியில் அவரது கொள்கைகளையே பின்பற்றப் போவதாக பெருமெடுப்பில் பிரச்சாரம் செய்தார்.
இத்தோடு C. P.L . S. S. P ஆகிய இரு கட்சிகளோடும் போட்டித் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டார். சிங்களப் பௌத்த மக்களுக்காக உழைக்கப் போவதாக இவர் கூறியதை நம்பிய சிங்கள மக்கள் 33.6 விழுக்காடு வாக்குகளை அளித்து 75 இடங்களில் வெல்ல வைத்தனர்.
ஐ. தே. க . வோ 37.6 விழுக்காடு வாக்குகளை பெற்றும் 30 ஆசனங்கள் கிடைத்தது. L. S. S .P ற்கு 12 ஆசனங்கள் கிடைத்தது. தமிழரசுக்கட்சி, 16 இடங்களைப் பெற்றுக் கொண்டது. இவ்வாறாகச் சிறிமாவோ உலகின் 1 வது பெண் பிரதமராகப் பதவி ஏற்றார்.
இவருடைய ஆட்சிக்காலத்தில் தான் தமிழர் பகுதிகளில் இராணுவ அடக்குமுறை முதன் முறையாக கட்டவிழ்த்து விடப்பட்டது.
February 12, 2008 at 9:03 am
I am expecting more articles… like this